Oru Nooru Murai
1
views
Lyrics
ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே நெடுந்தூரம் முன்னே நீண்டு கொண்டே செல்ல ஒரு வார்த்தையாலே தூரத்தை நீ கொல்ல ஏதேனும் சொல் பெண்ணே நீ சொல்லும் சொல் தேனே என்னை நீ எடுத்தாய் சிறை... தாமரை பூ வருமோ தரை... காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை... நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை... நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை வேற் ஒன்றும் தோன்றவில்லை நான் மழலை... ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே ♪ நான் மழையினில் நனைந்தது இல்லை ஓ மடுவினில் குளித்தது இல்லை நான் மரகத மலைகளை பார்க்க என் கனவிலும் வாய்த்தது இல்லை விலாவில் சிறகுகள் கண்டேன் உலாவ உன்னுடன் வந்தேன் எழுந்தேன்... விழுந்தேன்... கரைந்தேன் ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே ♪ Oh my love Oh my love Oh my love Oh my love நீ பறந்திடும் உயரத்தில் இருந்து(இருந்து) ஓ பறவையின் பார்வையில் பார்த்தாய்(பார்த்தாய்) ஆ சிறு சிறு உருவங்கள் விரைந்து(விரைந்து) ஓ நகர்வதை எறும்பென நினைத்தாய் எல்லாமே நடக்குது இன்று உனக்கும் பிடிக்கிது நன்று மறந்தேன் எனை நான் இழந்தேன் இது போலே எந்த நாளும் என்றும் இல்லை இனி மேலும் வரும் என்று நம்பவில்லை வான் எங்கும் ஹே ஹே ஓ கார்மேகம் ஹே வா என்றால் ஹே ஹே ஹே நீர் வார்க்கும் ஹே ஒரு தோகை மயில் தொற்றி கொண்ட தோளில் மழை ஈரம் வந்து சாரல் வீசும் நாளில் ஏதேனும் சொல் பெண்ணே நீ சொல்லும் சொல் தேனே
Audio Features
Song Details
- Duration
- 05:12
- Key
- 4
- Tempo
- 146 BPM