Saalaikal
6
views
Lyrics
எனக்காக நீளும் இந்த சாலைகள் எனக்கென்று விடியும் இந்த காலைகள் புதுமழையின் ஊடே சில வாசங்கள் அவை தானே எந்தன் புது தேடல் இருக்கரம் கொண்டு பறந்தாலுமே இப்புவியில் நானும் ஒரு துளிதானே உயரங்கள் நோக்கி தினம் எழுவேனே இவை தானே எந்தன் ஒரு தேடல் ஒரு விதையாய் இந்த அன்பை மனதுக்குள் நாம் சேர்த்தாலே விருச்சங்கள் அது கிளை விட்டுப்பிறியும் இந்த வாழ்க்கை ஒருமுறைதான் அதை வாழும் வரம் பேரின்பம் இவ்வன்பு ஒரு தவம்தான் இதை உந்தன் வாழ்வில் நடத்திடு இன்றே ♪ அர்த்தங்கள் இழந்த சொற்கள் போலே இலக்கில்லா ஒரு வாழ்க்கை எதற்கு உன் வாழ்க்கை சிதறி தவறி சென்றால் சரி சரி விடு அன்பென்றும் இருக்கு சிதறி பின்னாலே முன்னோக்கி பாயும் அம்பு தன் இலக்கை போய் சேரும் அதுபோலே மனதில் அன்பு கொண்டிரு சக உயிர்களும் உன்னோடு சேரு உன்னாலே உருவாகும் உனக்கான ஒரு மாற்றம் அதுபோதும் அதுதானே உன் தொடக்கம் கனவொன்று இருந்தால் தடுமாற்றங்கள் இல்லை அன்பென்ற ஒன்றே எல்லை மின்னல்கள் உன்னோடு சேர்ந்தேதான் அட விடியட்டும் அதன் பொருளை நீ உன்னோடு உணரு சுயநலமின்றி வரும் அன்பு அது தானே பெரும் நம்பிக்கை பெருங்கடல்போலே முடிவில் நீ ஆழங்காணு
Audio Features
Song Details
- Duration
- 06:24
- Key
- 7
- Tempo
- 125 BPM