Thaalatum Mounam Ondril (From "Kuruthi Aattam")

3 views

Lyrics

தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே
 சொல்லாத அன்பின் வாசம் நான் உணர்ந்தேன்
 எங்கேயோ என்னை கூட்டி செல்லும் பாதை நீ தானே
 எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீ தானே
 பாராமல் உன்னை பார்த்ததை நீ உணர்வாய்
 ஆனாலும் அதை மூடிவைத்து ஏங்க வைத்தாய்
 தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே
 உனை பார்க்கும் நாளில் மட்டும் வாழ்கின்றேனே
 எங்கேயோ என்னை கூட்டி செல்லும் பாதை நீ தானே
 எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீ தானே
 ♪
 ம்ம்-அன்பே உனை நான் காண்கிறேன்
 வேறென்ன வேறென்ன வேண்டும் இனி
 ஓசை எல்லாம் போனால் என்ன
 மௌனத்தில் ஆழ்கின்ற மாயம் தனி
 எப்போதோ நீ தந்த பார்வைகள் இப்போதும் வாழ்கின்றதே
 தண்ணீரில் வீழ்கின்ற தூறலாய் என் காதல் நீள்கின்றதே
 அன்பே கனிவாய் மலரும் உன் வார்த்தை
 இறகாய் எனையே தேற்றும்
 அடடா அடடா என் நாட்கள் இன்னொரு பிறவி கேட்கும்
 எங்கேயோ என்னை கூட்டி செல்லும் பாதை நீ தானே
 எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீ தானே
 ம்-ம்-ம்
 

Audio Features

Song Details

Duration
03:29
Key
8
Tempo
150 BPM

Share

More Songs by Shweta Mohan

Similar Songs